This Article is From Aug 04, 2018

நாகப்பட்டிணத்தில் 192 கிலோ கஞ்சா பறிமுதல்!

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் அருகே 192 கிலோ அளவிலான கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்

நாகப்பட்டிணத்தில் 192 கிலோ கஞ்சா பறிமுதல்!
Nagapattinam, Tamil Nadu:

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் அருகே 192 கிலோ அளவிலான கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்த உள்ளதாக போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சோதனை நடவடிக்கையை அப்பகுதிக்கு அருகில் இருக்கும் இடங்களில் தீவிரப்படுத்தினர் போலீஸார். அப்போது கடலோர கிராமமான பெரியகுத்தகைக்கு அருகே இருக்கும் செக் போஸ்ட்டை நோக்கி ஒரு கார் வந்ததைப் பார்த்த போலீஸார், அதை சோதனையிட்டனர்.

காரில் கஞ்சா இருந்ததை பார்த்த காவல் துறையினர் அதை பறிமுதல் செய்தனர். காரின் டிரைவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ரமேஷ் குமார் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. பின்னர் பிடிபட்ட கஞ்சாவின் அளவு 192 கிலோ என்று தெரிவிக்கப்பட்டது. அதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இன்னும் கூறப்படவில்லை.

இந்த கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தள்ளது.

.