This Article is From Jul 19, 2018

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை; இருவர் கைது!

கனடாவின் பிராம்டன் நகரத்தில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதாகும் பல்விந்தர் சிங், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை; இருவர் கைது!
Toronto:

கனடாவின் பிராம்டன் நகரத்தில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதாகும் பல்விந்தர் சிங், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

பல்விந்தர் சிங், கனரக வாகன ஓட்டியாக கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு கனடாவிற்கு புலம் பெயர்ந்துள்ளார். 

பல்விந்தர் சிங் வசித்து வரும் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை துப்பாக்கிசூடு சம்பவம் நடந்துள்ளது. அப்போது தான் அவர் குண்டடிபட்டு இறந்துள்ளார். துப்பாக்கிசூடு நடந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், பல்விந்தர் சிங் இறந்துவிட்டதாக தெரிவித்தது. 

பல்விந்தரைக் கொன்றதாகக் கூறி, மிஸ்ஸிசௌகா பகுதியைச் சேர்ந்த இரண்டு பதின் பருவத்தினர் போலீஸிடம் சரணடைந்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பல்விந்தர் சிங் குறித்து ஃபேஸ்புக்கில் அவரது நண்பர் ஒருவர், ‘பல்விந்தரின் மரணம் மிகவும் துக்கமளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் உன் பிறந்த நாளுக்காக அனைவரும் வாழ்த்து கூறினர். என்ன காரணமாக இருந்தாலும் நீ இறந்திறக்கக் கூடாது’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிராம்டன் நகரில் கொல்லப்படும் 11 வது இந்தியர் பல்விந்தர் என்று தகவல் கூறப்படுகிறது.

.