This Article is From Aug 21, 2019

மதுமிதா மீது காவல் நிலையத்தில் புகார்?

Bigg boss Madhumitha: மதுமிதாமீது காவல் நிலையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தனியார் தொலைக்காட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுமிதா மீது காவல் நிலையத்தில் புகார்?

Madhumitha, Bigg Boss Tamil Contestants: கடந்த வாரம், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss Tamil 3: கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல சர்ச்சைக்குறிய கருத்துகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அதில் முக்கியமாக பேசப்படுவது மதுமிதா (Madhumitha) அவர்களின் பிரச்னைதான். கடந்த வாரம், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார்.  பிக் பாஸ் வீட்டிற்குள், நடைபெற்ற எதோ ஒரு உரையாடலின்போது மதுமிதா தன்னை தானே காயப்படுத்திக்கொண்டார், அது பிக் பாஸ் விதிமுறைகளுக்கு எதிரானது, அதனால் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக நிகழ்ச்சி தயாராப்பாளர்களிடமிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இன்னிலையில், மதுமிதா குறித்து மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. மதுமிதாமீது காவல் நிலையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தனியார் தொலைக்காட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை தானே காயப்படுத்திக்கொண்டதற்காக சென்ற வார பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார். அவர் தற்கொலை செய்ய முயற்சித்து கையை அறுத்துக்கொண்டார் என்று வெளியில் வதந்திகள் பரவியிருந்தன. இதுகுறித்து எந்த ஒரு முழு விவரமும் தொலைக்காட்சி தரப்பிடமிருந்து வெளியாகவில்லை. பிக் பாஸ் விதிமுறைகளை மீறி அவர் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் என்று மட்டுமே நிகழ்ச்சி தரப்பிலிருந்து தகவல் வெளியானது.

இன்னிலையில், மதுமிதாமீது காவல் நிலையத்தில் தொலைக்காட்சி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுமிதா முறையாக சம்பளம் தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டுகிறார் என்பது போல புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே 11,50,000 ரூபாய் பணத்தை மதுமிதா பெற்றிருந்தததாகவும், மேலும் ஒரு நாளுக்கு 80,000 ரூபாய் விகிதம் நிகழ்ச்சியுன் ஒருங்கினைப்பாளர்கள் இன்னும் 42 நாட்களுக்கு சம்பள பாக்கி தர வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 60 நாட்களை கடந்துவிட்டது. 8 வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை, பாத்திமா (Fatima Babu), வனிதா (Vanitha Vijaykumar), மோகன் வைத்தியா (Mohan Vaidya), மீரா (Meera Mithun), ரேஷ்மா (Reshma Pasupuleti), சாக்க்ஷி (Sakshi Agarwal), அபிராமி (Abhirami Venkatachalam) என 7 பேர் வீட்டை விட்டு வெளியெற்றப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்ததற்காக சரவணன் (Saravanan) எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக கஸ்தூரி (Kasthuri) உள்ளே நுழைந்த சில நாட்களிலேயே, முன்னதாக வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே அனுப்பப்பட்டார். அதன்பின்தான் மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

.