This Article is From Aug 17, 2019

கையை அறுத்துக்கொண்டாரா மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Bigg Boss 3 Tamil: இன்றைய ப்ரோமோவில் மதுமிதா வெளியேறும்படியாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

கையை அறுத்துக்கொண்டாரா மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Bigg Boss 3 Madhumitha: வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா

Bigg Boss 3 Tamil: பிக் பாஸ் (Bigg boss) நிகழ்ச்சிக்காக வழக்காமாக தினமும் 3  ப்ரோமோக்கள் வெளியிடப்படும். அந்த 3 ப்ரோமோக்களும் சாதாரனமாக 4 மணி அளவில் வெளியாகியிருக்கும். ஆனால், இன்று முதல் ப்ரோமோவே 5 மணி போல தான் வெளியாகியுள்ளது. முன்னதாக 'தாமதத்திற்கு வருந்துகிறோம், Suda Suda 1st Promo on the way' என தகவல் வெளியாகியிருந்தது. இன்னிலையில், முதல் ப்ரோமோ சில நிமிடங்களுக்கு முன் வெளியானது.

அதில் மதுமிதா (Madhumitha) வெளியேறும்படியாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 'தட்டில் வைத்துக்கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.' என்கிறார் கமல். மேலும் 'இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்றும் கூறினார். சேரனிடம் பேசுகையில் 'இது ஒரு தவறான முடிவு, தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்' என்று கூறினார்.

இந்த ப்ரோமோவில் கவணிக்கப்பட வேண்டிய ஒன்று, மதுமிதா கைகளில் கட்டுப் போட்டிருந்தார். ப்ரோமோ வெளியாக தாமதமானதிலிருந்தே, பிக் பாஸ் ரசிகர்களிடையே பல சந்தேகங்கள் எழுந்திருந்தன. அவற்றில் ஒன்று, மதுமிதா தன் கைகளை அருத்துக்கொண்டார் என சமூக வலைதளங்களில் பரவலாக ஒரு வதந்தி பறவியது. தற்போது வெளியான ப்ரோமோவை பார்க்கும்போது, இது உண்மைதானா என சந்தேகிக்க தோணுகிறது.

அதுமட்டுமின்றி, முகென் வனிதா (Vanitha) அவர்களை அடித்துவிட்டதாகவும் வதந்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இது உண்மைதானா, இல்லை பொய்யா?

பிக் பாஸ் (Bigg boss) வீட்டிற்குள் என்ன நடக்கிறது? ஒருவேளை மதுமிதா (Madhumitha) கையை அருத்துக்கொண்டது உண்மை என்றால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.

.