This Article is From Sep 26, 2019

Bigg Boss Tamil 3, Day 95: 5 லட்சத்துடன் வெளியேறிய கவின்: கதறி அழும் லோஸ்லியா மற்றும் சாண்டி

Bigg Boss Tamil 3: இன்று வெளியான ப்ரோமோவில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணமாக “இத்தனையும் பண்ணிட்டு எப்படிண்ணே மேடையேற சொல்ற” என்று கூறுகிறார்.

Bigg Boss Tamil 3, Day 95:  5 லட்சத்துடன் வெளியேறிய கவின்: கதறி அழும் லோஸ்லியா மற்றும் சாண்டி

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு  நேரடியாகவே சென்றுள்ளார். மற்ற அனைவரும் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஷெரின் மறைத்து மறைத்து எழுதி கிழித்து போட்ட கடிதத்தை தர்ஷன் ஒட்டவைத்து படித்து விடுகிறார். பிறகு தனக்குரிய லெட்டரை கொடுக்கும்படி கேட்க, அதற்கு ஷெரின் கிழித்து போட்டு விட்டதாக தெரிவித்தார். உடனே தர்ஷன் லெட்டரில் குறிப்பிட்டுள்ள ஒரு வரியை சொல்லவும் அதிர்ச்சியடைந்த ஷெரின் தர்ஷின் சட்டையைப் பிடித்து ‘என்ன சொன்ன…?” என்று திரும்ப திரும்ப கேட்கிறார். 

கோபமடைந்து “நீ ஏன் அதனை படித்தாய். அது என்னுடைய தனிப்பட்ட ரகசியம். ஏன் அப்படி செய்தாய்” என்று கூறி தர்ஷனிடம் கேட்டார். ‘தவளை தன் வாயால் கெடுவது' போன்று தர்ஷன் மாட்டிக்கொண்டார். 

பின்னர், ஷெரினிடம் சென்று தான் மட்டுமே அதனை எடுத்து ஒட்ட வைத்து படித்ததாக ஒப்புக்கொண்டார். எனக்காக எழுதிய லெட்டரை நான் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீ குளிக்கச் சென்ற போது எடுத்து படித்தேன் என்றார். இதற்கு ஒன்றும் சொல்மால், “என்னிடம் தனியாக சொல்லியிருக்கலாம். மற்ற போட்டியாளர்கள் முன்பு கூறியது தான் வருத்தமாக இருக்கிறது” என்று ஷெரின் சண்டைக்கு முடிவு கட்டினார். தொடர்ந்து தர்ஷனின் மன்னர் பதவி பறிக்கப்பட்டது. மற்ற போட்டியாளர்களுக்கு தர்ஷன் பணிவிடைகள் செய்தார். வளையத்திற்குள் இருக்கும் பந்தை எடுக்கும் டாஸ்க்கில் லோஸ்லியா வெற்றி பெற்றுள்ளார். 

இதனைதொடர்ந்து, ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். முதலில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் வேழம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

இறுதியில், “ஒருவர் மட்டுமே இந்தப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.50 லட்சம் பெற முடியும். இதனிடையே ரூ.5 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் இருந்தும், வீட்டை விட்டும் வெளியேறுவதற்கு போட்டியாளர்களாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது” என்று பிக் பாஸ் கூறினார். 

இதனைக் கேட்ட போட்டியாளர்கள் ஆளாளுக்கு யோசித்துக் கொண்டிருந்த நிலையில், கவின் மட்டும் எழுந்து நின்றார். இதனைக் கண்ட லோஸ்லியா, சாண்டி இருவரும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர்.  இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் நிகழ்ச்சியில்  இருந்து வெளியேறுவதற்கான காரணமாக  “இத்தனையும் பண்ணிட்டு எப்படிண்ணே மேடையேற சொல்ற” என்று கூறுகிறார்.

ப்ரோமோவில் லோஸ்லியாவிடம் ‘அப்பாவின் போட்டோவைக் கொடுத்து 10 நாள் விளையாட்டை நன்றாக விளையாடி விட்டு வா” என்று கூறி கொடுத்து விட்டு நடக்கிறார். லோஸ்லியாவோ ‘நீ ஏன் போற…?' என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டபடி இருக்கிறார். 

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற லோஸ்லியாவும் சாண்டியும் அழுது கதறியபடி வழியனுப்புகின்றனர். 

.