This Article is From Aug 31, 2019

Bigg Boss வீட்டை விட்டு வெளியேறினாரா கவின்?

Bigg Boss Kavin: சமூக வலைதளங்களில் இது போன்ற சர்ச்சைகள் பரவி வருகின்றன. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் நிகழ்ச்சி தரப்பிடமிருந்து வெளியிடப்படவில்லை.

Bigg Boss வீட்டை விட்டு வெளியேறினாரா கவின்?

Bigg boss 3 Tamil: கவின் (Kavin) என்னும் கவின்ராஜ், பிக் பாஸ் தமிழ் 3வது சீசனில் போட்டியாளர்களாக நுழைந்த 16 பேரில் ஒருவர். எப்போதும் இல்லாத அளவில், இந்த சீசன் பிக் பாஸ் சர்ச்சைகள் நிறைந்ததாகவே பயணிக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி சுமார் 70 நாட்களை கடக்க இருக்கிறது. இந்த காலத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியினுள் மட்டுமல்லாமல், இந்த சர்ச்சை நிகழ்ச்சிக்கு வெளியினுள்ளும் பிக் பாஸ் பிரபலங்களை தொடர்ந்துகொண்டே இருந்தது. மீராவின் பணமோசடி வழக்கு, மதுமிதாவின் கொலை மிரட்டல் வழக்கு என இந்த நிகழ்ச்சி வெளியிலும் பரபரப்பாகவே இருந்தது. இன்னிலையில், மற்றொரு பிக் பாஸ் பிரபலத்தின் குடும்பம், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த  முறை கவின், அவரது குடும்பத்தினருக்கு சீட்டு மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இன்னிலையில், இந்த செய்தியை கேட்ட கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

கவினின் தாய் ராஜலட்சுமி உட்பட சொர்நாதன், அருணகிரிநாதன், தமையேந்தி, ராணி என்று ஐந்து பேர் சேர்ந்து திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஏலச்சீட்டு நடத்திய இவர்கள் 2007-ஆம் ஆண்டு, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பத்தராமல் தலைமறைவானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின் இந்த பண மோசடியில் பாதிக்கப்பட்ட 29 பேரும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். அப்படி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரனை நடத்தப்பட்டதுள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற விசாரனையில், இந்த வழக்கில் சமந்தப்பட்ட 31 சாட்சிகளிடம் நீதிபதி விசாரனை நடத்தியுள்ளார். 31 பேருமே இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்ன காரணத்தினால், நீதிபதி இந்த ஐந்து பேரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.

மேலும், இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் பணமும், 2007 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, அந்த 1 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வட்டியுடன், மொத்தம் 55.10 லட்சம் ரூபாய் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும், அப்படி செலுத்த தவறினால் இவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்னிலையில் இந்த செய்தியை கேட்ட பிக் பாஸ் (Bigg Boss) வீட்டிற்குள் இருந்த கவின், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் நிகழ்ச்சி தரப்பிடமிருந்து வெளியிடப்படவில்லை. 

முன்னதாக, இந்த போட்டியில் பங்கேற்ற 16 பேரில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சாக்க்ஷி, அபிராமி என அனைவரும் அடுத்த அடுத்த வாரங்களில் வெளியேறினர். இவர்கள் இல்லாமல், சரவணன் சர்ச்சைக்குறிய கருத்துகளை கூறியதற்காகவும், மதுமிதா வீட்டிற்குள் தன் கைகளை அறுத்துக்கொண்டதற்காக வெளியே அனுப்பப்பட்டார். அதுமட்டுமின்றி வைல்ட்-கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்த கஸ்தூரி சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார். இவர்களை தவிர்த்து முன்னதாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வனிதா வைல்ட்-கார்டு போட்டியாளராக மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார்.

.