This Article is From Sep 30, 2019

Bigg boss 3 tamil, Day 99 : தர்ஷனின் எவிக்‌ஷனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள்: ட்ரெண்டாகும் #TharshanTheRealWinner

Bigg boss 3 tamil, Day 99 : கமல்ஹாசன் அங்கிருந்தவர்களிடம் ‘எத்தனை பேர் வாக்களித்தீர்கள்….?’ என்று கேட்டார் அனைவரும் வாக்களித்ததாக சொல்ல ‘பிறகு ஏன் தர்ஷன் வெளியேறினார்’ என்று கேள்வி எழுப்பினார். தன்னுடைய விருப்பமான மற்றும் தான் வாக்களிக்கும் விரும்பும் போட்டியாளர் என்றால் அது தர்ஷன்தான் என்றார்.

Bigg boss 3 tamil, Day 99 : தர்ஷனின் எவிக்‌ஷனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள்: ட்ரெண்டாகும்  #TharshanTheRealWinner

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதி போட்டியில் கலந்து கொள்பவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டார்கள். இதில், யாரும் எதிர்பார்க்காத அதே நேரத்தில் மக்களின் ஆதரவை பெற்ற தர்ஷன்  எவிக்‌ஷனில் வெளியேறினார். 

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எவிக்‌ஷனில் தர்ஷன் பெயர் இடம்பெற்றிருந்ததை அனைவருக்கும் காண்பித்தார். யாரலும் இதை நம்ப முடியவில்லை. எல்லாமே மக்களின் தீர்ப்பு என்றார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷன் கமல்ஹாசன் இருந்த மேடைக்கு வந்தார். 

நீங்கள் சோர்ந்திருந்தால் அதற்கான மருந்து இங்கே இருக்கிறது. என்று சொல்ல மக்களின் கைதட்டு ஒலி அரங்கையே அதிர வைத்தது.  கை நழுவியது ஒரு தோல்வியல்ல. தோல்வியே தோல்வியல்ல. வெற்றியின் முதல் படிக்கட்டு.. என்னைப் போன்று பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது. என்ன இப்படி செய்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் மீது தான் எனக்கு சந்தேகம் இருந்தது. நீங்கள் வந்த வேலையை சரியாக முடித்து சாதித்துவிட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். 

மாற்று கருத்துகளுக்காக மனம் தளரக்கூடாது. தர்ஷன் என்ற உருவத்திற்கு அடையாளம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது புகழின் ஆரம்பம் மட்டுமே என்றார். 

கமல்ஹாசன் அங்கிருந்தவர்களிடம் ‘எத்தனை பேர் வாக்களித்தீர்கள்….?' என்று கேட்டார். அனைவரும் வாக்களித்ததாக சொல்ல ‘பிறகு ஏன் தர்ஷன் வெளியேறினார்' என்று கேள்வி எழுப்பினார். தன்னுடைய விருப்பமான மற்றும் தான் வாக்களிக்கும் விரும்பும் போட்டியாளர் என்றால் அது தர்ஷன்தான் என்றார்.  தர்ஷனின் ரசிகர்கள் பலரும் இந்த வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

பலரும் #TharshanTheRealWinnerமற்றும்#tharshanஎன்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்களின் வேறுபட்ட கருத்தினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  பிக் பாஸ் விளையாட்டினை மிகவும் நேர்மையாக விளையாடி இறுதி வரை வெற்றியாளராக வரவேண்டும் என்ற முனைப்புடன் இருந்த தர்ஷன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. 

.