This Article is From Sep 30, 2019

Bigg Boss 3 Tamil, Day 99 : இ-தோசை, குப்பைத்தொட்டி கொத்தமல்லி ஆம்லேட், சாண்டியின் அடடே சமையல்கள்!

Bigg Boss 3 Tamil - சாண்டியின் (Sandy) சமையல் திறமைகளை பிக் பாஸ் நிகழ்ச்சி, உலகமே அறியவைத்து அலெர்ட் செய்துவிட்டது.

Bigg Boss 3 Tamil, Day 99 : இ-தோசை, குப்பைத்தொட்டி கொத்தமல்லி ஆம்லேட், சாண்டியின் அடடே சமையல்கள்!

Bigg Boss 3 Tamil: புலாவை பிக் பாஸும் சாப்பிட வேண்டும் என்று கூறி ஒரு பவுலில் வைத்து ஸ்டோர் ரூமில் வைத்தார் சாண்டி

பிக்பாஸ் 3 (Bigg boss 3 Tamil) இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. முகேன், சாண்டி, லோஸ்லியா, ஷெரின் ஆகிய நால்வரும் இறுதிப் போட்டியாளர்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. கமல்ஹாசன் இதை அறிவித்தார். அதற்கு முன்பு போட்டியாளர்களிடம் அந்த வாரங்களில் நடந்ததைப் பற்றி பேசினார். 

அப்போது சாண்டியிடம் ஈ-தோசை குறித்தும் பேசினார். சாண்டி, தோசை ஊற்றிவிட்டு தோசைக்கல்லை கையில் தூக்கி சுழற்ற, பறந்து கொண்டிருந்த அதில் தோசை விழுந்தது. அந்த தோசையைக் கீழே போட்டால் வீணாகிவிடும் என்று கருதி, அதை மற்ற தோசைகளுடன் கலந்து வைத்துவிட்டார். மற்றொரு நாள் புலாவ் செய்வதாகச் சொல்லி, அதை பொங்கல் போல கட்டியாக வைத்தார். கொத்தமல்லி ஆம்லேட் போட ஃபிரிட்ஜில் இருந்து கொத்தமல்லி எடுத்தபோது அது குப்பைத் தொட்டியில் விழுந்துவிட்டது. யாரும் பார்க்காத நேரத்தில் அதனை எடுத்து அப்படியே கட் பண்ணி முட்டையில் கலந்து கொத்தமல்லி ஆம்ப்ளேட் செய்து கொடுத்தார். 

தான் செய்த புலாவை பிக் பாஸும் சாப்பிட வேண்டும் என்று கூறி ஒரு பவுலில் வைத்து ஸ்டோர் ரூமில் வைத்தார் சாண்டி. பிரியாணி செய்தபோது பிளாஸ்டிக் தட்டு ஒன்றை அடுப்பில் எரிந்துவிட்டது. இதுபோன்று சாண்டியின் சமையல் லீலைகளை சொல்லிக் கொண்டே இருந்தனர் ஹவுஸ் மேட்ஸ்.

இவையெல்லாம் போதாது என்று கமல்ஹாசனுக்கு சமையல் செய்து கொடுக்க விருப்பம் இருப்பதாக கேமரா முன்பு சாண்டி கூறியதாக லோஸ்லியா தெரிவித்தார். 

இதைக்கேட்ட கமல், ‘நான் என்ன உங்களுக்கு எதிரியா…?,' என்று கேட்க... அரங்கமே சிரிக்கிறது. 

சாண்டியின் சமையல் திறமைகளை பிக் பாஸ் நிகழ்ச்சி, உலகமே அறியவைத்து அலெர்ட் செய்துவிட்டது.

.