This Article is From Nov 19, 2019

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு... ராணுவ வீரர்கள் சிக்கியதாக தகவல்!

இது குறித்தான மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு... ராணுவ வீரர்கள் சிக்கியதாக தகவல்!

சுமார் 18,000 அடிகளுக்கு மேல் இன்று மாலை 3:30 மணி அளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டிருக்கும் எனப்படுகிறது.

New Delhi:

சியாச்சின் (Siachen) பகுதியில் இருக்கும் ராணுவ இடத்தில் பனிச்சரிவு (avalanche) ஏற்பட்டதால், அங்கிருக்கும் பல ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள்தான் இந்தப் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள், ஏஎன்ஐ-க்கு தகவல் அளித்துள்ளது. 

சுமார் 18,000 அடிகளுக்கு மேல் இன்று மாலை 3:30 மணி அளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டிருக்கும் எனப்படுகிறது.

இது குறித்தான மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். 

.