This Article is From Aug 31, 2018

அதிமுக-வை யாராலும் அழிக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பழனிசாமி, ‘தேர்தலுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. அது குறித்து பிறகு பார்ப்போம்’ என்று கூறினார்

அதிமுக-வை யாராலும் அழிக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வரும் அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுகவை, திமுக அழிக்க நினைக்கும் கனவு ஒரு நாளும் பலிக்காது’ என்று கருத்து கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, ‘அதிமுக-வை யாராலும் அழிக்க முடியாது. திமுக போன்ற ஒரு கட்சிக்கு, மற்ற கட்சிகளின் உட்கட்சி பூசலில் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும்’ என்றவரிடம், ‘திமுக-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல்’ குறித்து கருத்து கேட்டபோது, அது குறித்து பேச மறுத்துவிட்டார்.

அவர் தொடர்ந்து, ‘எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் ஜனநாயகப் பூர்வமாக நடந்து கொள்கிறோம். நாங்கள் மற்றவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. அதிமுக என்பது எம்.ஜி.ஆர் அவர்களால் நிறுவப்பட்டு, ஜெயலலிதாவால் நிர்வகிக்கப்பட்டது. எனவே, ஒரு திமுக அல்ல, எத்தனை திமுக வந்தாலும் அதிமுக-வை ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியாது. அது எப்போது நடக்காது’ என்றார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பழனிசாமி, ‘தேர்தலுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. அது குறித்து பிறகு பார்ப்போம்’ என்று கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.