This Article is From Aug 20, 2019

நிலவின் சுற்றுவட்டப்பாதையை இன்று காலை அடைகிறது சந்திராயன்-2

புவி வட்ட பாதையை விட்டு வெளியேறியுள்ள சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் முதல் வட்டப்பாதையை அடைகிறது. அப்போது விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு, சந்திரயான் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைக்கப்படும்.

நிலவின் சுற்றுவட்டப்பாதையை இன்று காலை அடைகிறது சந்திராயன்-2

சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் முதல் வட்டப்பாதையை அடைகிறது. இது மிக முக்கிய தருணமாகும்.

Bengaluru:

சந்திராயன் 2 விண்கலம், இன்று காலை 9:30 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் மாற்றப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ம் முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. 

அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. 

இவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் நாள் அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது. 

நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், புவி வட்ட பாதையை விட்டு வெளியேறியுள்ள சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் முதல் வட்டப்பாதையை அடைகிறது. அப்போது விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு, சந்திரயான் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைக்கப்படும். அதன் மூலம் நிலவின் பரப்பில் இருந்து குறைந்த பட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,078 கி. மீ. தொலைவையும் கொண்ட நீள் வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும். 

முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை திரவ என்ஜின் இயக்கப்பட உள்ளது. இது மிக முக்கிய தருணமாகும் என்றார்.

.