This Article is From Mar 07, 2020

கீழ்ப்பாக்கம் இல்லத்தில் க.அன்பழகன் உடல்: அரசியல் தலைவர்கள்‌ அஞ்சலி!

க.அன்பழகன் (97) உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர் பிரிந்தது.

கீழ்ப்பாக்கம் இல்லத்தில் க.அன்பழகன் உடல்: அரசியல் தலைவர்கள்‌ அஞ்சலி!

நள்ளிரவு 1 மணியளவில் பேராசிரியர் க.அன்பழகனின் உயிர்பிரிந்தது.

ஹைலைட்ஸ்

  • நள்ளிரவு 1 மணியளவில் அன்பழகனின் உயிர்பிரிந்தது
  • கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்
  • அரசியல் தலைவர்கள்‌ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உயிரிழந்த நிலையில் கீழ்ப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் (97) உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர் பிரிந்தது. கடந்த மாதம் 24ம் தேதியன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குக் கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வந்தார். அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் உயிர் பிரிந்தது.

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 2.30 மணியளவில் அன்பழகனின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

க.அன்பழகன் மறைவையொட்டி, திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவாரக் காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

.