This Article is From Aug 19, 2019

மினி வேன் கவிழ்ந்து 8 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மினி வேன் கவிழ்ந்து 8 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலை அருகே இருந்து கிணற்றுக்குள் பாய்ந்தது.

துறையூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புதூரில் சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கிராமத்திற்கு அருகே உள்ள கோவில் பூஜைக்காக, சென்ற அந்தச் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணித்துள்ளனர். அப்போது வாகனத்தின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலை அருகே இருந்து கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, மீட்புக்குழுவினருடன் விரைந்து வந்து கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரண நிதியையும் அவர் அறிவித்திருக்கிறார். 

அதன்படி, உயிரிழந்த எட்டு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிதி வழங்கப்படுவதாக எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.

.