This Article is From Nov 15, 2019

கோவையில் ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழப்பு!!

புதன்கிழமையன்று இரவு கல்லூரி அருகே மது அருந்திய மாணவர்கள், பின்னர் தண்டவாளத்தில் பேசிய படி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கோவையில் ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழப்பு!!

மதுபோதையில் இருந்த மாணவர்கள் ரயிலை கவனிக்க தவறிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். (Representational)

Coimbatore:

கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன்கிழமையன்று இரவு கல்லூரி அருகே மது அருந்திய 5 மாணவர்கள், பின்னர் ரயில்வே தண்டவாளத்தில் பேசிய படி நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆலப்புழா - சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் மாணவர்கள் மீது மோதியதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு இளைஞர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உயிரிழந்த 4 பேரும், 21 முதல் 23 வயதுடையவர்கள் ஆவார்கள்.  ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்றும், மதுபோதையில் தண்டவாளத்தில் நடந்த சென்றதே விபத்திற்கு  காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 


 

.