This Article is From Oct 17, 2019

சவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 வெளிநாட்டவர்கள் பலி!

Saudi accident: இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அரபு மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 வெளிநாட்டவர்கள் பலி!

சவுதியில் புனித யாத்திரை சென்ற 35 வெளிநாட்டவர்கள் பலி (Representational)

Riyadh:

சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் என சவுதி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இதுதொடர்பாக மதினா காவல்துறை செய்திதொடர்பாளர் கூறும்போது, மேற்கு சவுதி அரேபியாவிற்கு அருகே, ஒரு தனியார் பயணிகள் பேருந்து, கனரக வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அரபு மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில் பேருந்து தீ பிடித்து எரிகிறது. அதிலிருந்து ஜன்னலை உடைத்து பயணிகள் வெளியேற்றப்படுகின்றனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசாரும் மீட்பு படையினரும், காயமடைந்தவர்களை மீட்டு அல்ஹம்னா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருவதை தருவது வழக்கம். முன்னதாக, இதேபோல், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மினி பேருந்து ஒன்றில் சென்ற 2 மாத கைக்குழந்தை உட்பட பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 6 பேர் மதினா அருகே விபத்தில் உயிரிழந்தனர். 

.