This Article is From Jun 03, 2019

உ.பியில் 2 ராணுவ வீரர்கள் மீது கொடூர தாக்குதல்!

அந்த வீடியோவில், 10க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பலால் 2 பேர் தாக்கப்படுகின்றனர்.

இந்த தாக்குதலில் பாக்பாத்தில் உள்ள கிரமாம் ஒன்றை சேர்ந்த அமித் என்பவர் காயமடைந்தார்.

ஹைலைட்ஸ்

  • உணவக ஊழியர்களுடன் 2 வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • வீதியில் வைத்து ராணுவ வீரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
  • உணவக ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Baghpat:

உத்தர பிரதேசம் பாக்பாத் பகுதியில் உணவகம் ஒன்றில் ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த உணவக ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், 10க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பலால் 2 பேர் தாக்கப்படுகின்றனர். அதில், பச்சை நிற குர்தா அணிந்த அமித் என்ற ராணுவ வீரர் பதில் தாக்குதல் நடத்தி, அவர்களை தரையில் தள்ளி விடுகிறார். தொடர்ந்து, மற்றவர்கள் அவர்களை கட்டையால் தாக்குகின்றனர்.

மற்றொரு ராணுவ வீரரும், தாக்குதல் நடத்தியவர்களுடன் பதில் தாக்குதலில் ஈடுபடுகிறார். இந்த தாக்குதலில் பாக்பாத்தில் உள்ள கிரமாம் ஒன்றை சேர்ந்த அமித் காயமடைந்தார்.

இதுகுறித்த தகவலின்படி, உணவக ஊழியர்களுடன் ராணுவ வீரர்கள் 2 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, வாக்குவாதம் கைகளப்பாக முற்றவே இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர். தொடரந்து, சாலையில் வைத்து ராணுவ வீரர்களை உணவக ஊழியர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக உணவக ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

.