This Article is From Apr 07, 2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789-ஆக உயர்வு!!

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிகம் பாதிக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789-ஆக உயர்வு!!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789 ஆக உயர்வு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • நேற்று மட்டும் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது
New Delhi:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் எண்ணிக்கை இன்று 508 ஆக குறைந்துள்ளது. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிகம் பாதிக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மாதம் 25-ம்தேதி முதற்கொண்டு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. 

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்,'எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ஊரடங்கை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். முதலில் மக்களைத்தான் காப்பாற்ற வேண்டும். பொருளாதாரத்தை நாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'ஊரடங்கை உடடினயாக நம்மால் திரும்பப் பெற முடியாது. படிப்படியாகத்தான் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதேபோன்று பாஜக ஆளும் அசாம் மாநிலமும் படிப்படியான, அறிவியல் முறைப்படி ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. 'கொரோனா முழுவதும் நீங்கினால்தான் ஊரடங்கை திரும்பப் பெற வேண்டும். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட, நிலைமை விபரீதமாகிவிடும்' என்று உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது. 

இவ்வாறு மாநிலங்களின் வலியுறுத்தல்களை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.