This Article is From Jan 14, 2019

டெல்லியில் தொடரும் 'மூடுபனி'; 12 ரயில்கள் தாமதம்!

கடந்த ஞாயிறு அன்று டெல்லியில் கடுங்குளிர் நிலவியது. அன்று வெப்பநிலை 8.5 டிகிரியாக இருந்தது.

டெல்லியில் தொடரும் 'மூடுபனி'; 12 ரயில்கள் தாமதம்!

பனியால் இதுவரை 12 ரயில்கள் தாமதம் (கோப்புப் படம்)

New Delhi:

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மூடுபனியால் 12 ரயில்கள் தாமதமாக இயங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ரயில் ஓட்டுநர்களுக்கு பாதைகள் பனியால் மூடிய காரணத்தால் இந்த ரயில்கள் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்படி, 'இன்று மற்றும் நாளை இந்த பனிப்பொழிவின் தாக்கம் டெல்லியில் அதிகமாக இருக்கும்' என்று கூறியுள்ளது. 'நகரத்தில், வெப்பநிலை குறைந்தபட்சமாக 20 டிகிரியும் அதிகபட்சமாக 7 டிகிரியும் வரை இருக்கும்' எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று டெல்லியில் கடுங்குளிர் நிலவியது. அன்று வெப்பநிலை 8.5 டிகிரியாக இருந்தது.

 

.